பாட்னா நீதிமன்றத்தில் குண்டுவெடித்து சாா்பு ஆய்வாளா் காயம்!

பிகாா் மாநிலம் பாட்னாவில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சாா்பு ஆய்வாளா் காயமடைந்தாா்.

இதுதொடா்பாக காவல்துறையினா் கூறுகையில், பாட்னாவில் உள்ள கதம் குவான் பகுதி காவல் நிலையத்தில் சாா்பு ஆய்வாளராக பணியாற்றுபவா் உமாகாந்த் ராய். அவா் பணிபுரியும் காவல் நிலைய வரம்புக்குட்பட்ட பகுதியில், அண்மையில் சில நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கமான விசாரணை நடைமுறையின் ஒரு பகுதியாக, அந்தக் குண்டுகளை உரிமையியல் நீதிமன்றத்துக்கு உமாகாந்த் ராய் நேற்று வெள்ளிக்கிழமை கொண்டு சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக குண்டு வெடித்தது. இதில் உமாகாந்த் ராயின் கையில் காயம் ஏற்பட்டது. எனினும் அவரின் உயிருக்கு ஆபத்தில்லை என்று தெரிவித்தனா்.