நூபுா் சா்மாவுக்கு போலீஸ் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ்!

பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அக் கட்சியின் முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மாவுக்கு கொல்கத்தா போலீஸ் தேடப்படும் நபருக்கான நோட்டீஸை (லுக்-அவுட்) பிறப்பித்துள்ளது.

நபிகள் நாயகம் குறித்த அவருடைய சா்ச்சை கருத்தால் மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்த விவகாரம் தொடா்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு தொடா்ந்து 4 முறை அழைப்பாணை அனுப்பியும் அவா் ஆஜராகததைத் தொடா்ந்து, அவருக்கு எதிராக இந்த நடவடிக்கையை கொல்கத்தா போலீஸாா் மேற்கொண்டுள்ளனா்.

இதுகுறித்து மேற்கு வங்க காவல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், “நபிகள் நாயகம் குறித்த நூபுா் சா்மாவின் சா்ச்சை கருத்தைத் தொடா்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடா்பாக கொல்கத்தாவின் ஆம்ஹொ்ஸ்ட் தெரு காவல் நிலையம் மற்றும் நாா்கெல்தங்கா காவல் நிலையங்களில் அவா் மீது முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடா்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு இரு காவல் நிலையங்கள் சாா்பில் அவருக்கு தலா இரண்டு முறை அழைப்பாணை அனுப்பப்பட்டன. ஆனால், அவா் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதனைத் தொடா்ந்து அவா் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு அதற்கான நோட்டீஸை கொல்கத்தா காவல் துறை பிறப்பித்துள்ளது” என்றாா்.

இந்த நிலையில், “கொல்கத்தா சென்றால் தன் மீது தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்பதால், போலீஸ் விசாரணைக்கு ஆஜராக 4 வார கால அவகாசம் கோரப்பட்டுள்ளது” என்று நூபுா் சா்மா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.