அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல்!

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.

சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்க உள்ளது. பொதுக்குழுவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி வானகரம் நோக்கி பயணித்து வருகிறார். இதற்கிடையில், ஓ.பன்ன்னீர் செல்வம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி பயணித்து வருகிறார். இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. கற்கள், கட்டைகளை கொண்டு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில், சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவ்வழியாக வந்த பஸ் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் அங்கு குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதி போர் களம்போல நிலவி வருகிறது.

அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி வந்த ஓ.பன்னீர் செல்வம் வாகனம் மீது கற்கள் வீசப்பட்டது. ஓ.பன்னீர் செல்வத்தின் வாகனம் அவ்வை சண்முகம் சாலையில் நிறுத்தப்பட்டது. காவல்துறையினர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பாதுகாப்பு வழங்கினர். அதிமுக பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றுள்ளதால் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளார். ராயப்பேட்டையே ரத்தகளறியாக காணப்படுவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உள்ளே விட மறுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தகராறு செய்வதால் பதற்றம் உருவாகியுள்ளது. வன்முறை களமாக மாறியுள்ளது அவ்வை சண்முகம் சாலை. பூட்டப்பட்டிருந்த அதிமுக அலுவலகத்தை உதைத்து திறந்து உள்ளே நுழைந்துள்ளனர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள்.

அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை அலுவலகம் போர்க்களம் போல காட்சியளிக்கிறது. தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தாக்குவதற்காக வீசிய கற்கள் எங்கும் சிதறிக்கிடக்கின்றன. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இருந்த எடப்பாடிபழனிச்சாமியின் பேனர்களை ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கிழித்து வீசினர். எடப்பாடி பழனிச்சாமி ஆதரவளர்களுக்கும் ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கும் நிகழ்ந்த வன்முறையால் ரத்தக்களறியாகியுள்ளது ராயப்பேட்டை. தலைமைக் கழகத்தை கைப்பற்றியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். கையில் அதிமுக கொடியுடன் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளார் ஒ.பன்னீர் செல்வம். பொன்விழா காணும் அதிமுக அதிமுக தலைமை அலுவலத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவும் நிலையில் வானகத்தில் பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றுள்ளார். அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பேனர்களை கிழித்து தீ வைத்து எறித்து வருகின்றனர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள். அதிமுக பொன்விழா காணப்போகும் இந்த காலகட்டத்தில் மிகப்பெறும் வன்முறை நடைபெறுவது தொண்டர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.