கொரோனா தொற்று: ஓ பன்னீர்செல்வம் மருத்துவமனையில்அனுமதி!

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

முன்பாக முதலமைச்சர் ஸ்டாலின், மருத்துவர் ராமதாஸ் ஆகியோரும் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பன்னீர்செல்வமும் கொரோனா தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஓபிஎஸ் பூரண நலம்பெற வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டுவீட் பதிவிட்டுள்ளார். அந்த பதில், “முன்னாள் முதல்வர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான திரு ஓ. பன்னீர்செல்வம் அண்ணன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண நலம் பெற்று மக்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!” என்று தெரிவித்துள்ளார்.