தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது: அண்ணாமலை

சிலரைப் பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது என்று, பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சார கட்டணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் “பல சாக்குப் போக்குகள் சொல்லி தமிழகத்தின் மின்துறை அமைச்சர் அனைத்து தரப்பட்ட மக்களின் மின் கட்டணத்தை இன்று உயர்த்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில், சிலரைப் பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா?”. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.