பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மருத்துவமனையில் அனுமதி!

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வயிற்றுப் பிரச்னை காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அதிகாலை அனுமதிக்கப்பட்ட பகவந்த் மானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் பாடகர் சித்து மூஸே வாலா கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரை காவல்துறை சுட்டுக் கொன்றதற்கு நேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.

முன்னதாக மருத்துவர் குர்ப்ரீத் கெளர் என்பவரை ஜூலை 7ஆம் தேதி பகவந்த் மான் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.