உயிரிழந்த கபடி வீரர் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.3 லட்சம் நிதியுதவி!

கடலூரில் நடந்த கபடி போட்டியில் விளையாடிக் கொண்டியிருக்கும் போதே உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கடலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் மதுரா மானடிகுப்பம் கிராமத்தில் உள்ள புளியந்தோப்பு மைதானத்தில் ஜூலை 24 அன்று மாவட்ட அளவில் கபடி போட்டி நடந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற புறங்கனி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் (எ) விமல்ராஜ்(21), என்ற இளைஞர் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்தவரின் பெற்றோருக்கும் மற்றும் சகோதரிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த சஞ்சய் (எ) விமல்ராஜ்யின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாயை முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.