நுபுர் சர்மா மீதான அனைத்து வழக்குகளும் டெல்லிக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல் துறைக்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக நிர்வாகிநுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது போலீசாருக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் நுபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல்துறைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிமித்தமாக எதிராக அனைத்து வழக்குகளும் டெல்லி காவல்துறை மாற்றப்பட உள்ளன என்பதும் அனைத்து வழக்குகளும் ஒன்றிணைந்து விசாரிக்கப்பட்ட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பல்வேறு மாநிலங்களில் தன் மீது பதியப்பட்டுள்ள 10 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து அதை ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டுமென நுபுர் சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்று நீதிமன்றம் இந்த ஆணையை வெளியிட்டுள்ளது.