சுவிஸ் வங்கியில் 814 கோடி டிபாசிட்: அனில் அம்பானிக்கு நோட்டீஸ்!

சுவிஸ் வங்கியில் இரண்டு ரகசிய கணக்குகளில் ‘டிபாசிட்’ செய்து உள்ள பணத்துக்கு, 420 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்கு, வருமான வரித்துறை ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்கு, வருமான வரித்துறை அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது:-

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கியில் இரண்டு ரகசிய கணக்குகள் துவக்கி, அதில் 814 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணத்துக்கு 420 கோடி ரூபாய் வரி செலுத்தவில்லை. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆக., 31க்குள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.