ஜம்மு-காஷ்மீரில் சோபூர் மாவட்டத்தில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபூர் மாவட்டத்தில் துலிபால் பகுதியில் வெடிகுண்டுகளைப் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர்.

இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று அதிகாலை மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள துலிபால் பகுதியில் சுமார் 3 கிலோகிராம் எடையுள்ள வெடிகுண்டுகளைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அப்பகுதியில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டு, பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. வெடிகுண்டு செயலிழக்கும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, செயலிழக்கச் செய்தனர். பாதுகாப்புப் படையினரின் விழிப்புணர்வும், துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.