தமிழக எல்லைக்குள் கேரளா எல்லையை அதிகரிப்பதை அரசு கண்டுகொள்ளவில்லை: அண்ணாமலை

தமிழக எல்லைக்குள் கேரளா எல்லையை அதிகரிப்பதை தமிழக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் ஒரு சதுர அங்குல மண்ணை கூட கேரள அரசு கொண்டு செல்ல பாஜ., அனுமதிக்காது. கேரள அரசின் நில அளவீடு பணிகளை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. நில வளத்தை பலி கொடுப்பதை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். தமிழக நிலங்கள் பறி போகாமல் தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள கம்யூனிஸ்ட் அரசு திறையாக நிலத்தை சுரண்டி, தனது எல்லைகளை அதிகரித்து வருவது பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழக எல்லைக்குள் கேரளா எல்லையை அதிகரிப்பதை தமிழக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.