திமுக அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தால் எந்த பலனும் இல்லை: எச்.ராஜா!

திமுக நடத்​தும் அனைத்​துக் கட்சி கூட்​டம் குறிக்​கோளற்​றது எனவும், அது எந்த பலனும் இல்​லாதது எனவும் பாஜக மூத்த தலை​வர் எச்.​ராஜா கூறியுள்ளார்.

பாஜக மாநில மையக்​குழு கூட்​டம், சென்னை தி.நகரில் உள்ள கட்​சித் தலை​மையகத்​தில் நேற்று நடை​பெற்​றது. மாநில தலை​வர் அண்​ணா​மலை தலைமை தாங்​கி​னார். கூட்​டத்​தில் பாஜக மூத்த தலை​வர்​கள் பொன்​.​ரா​தா கிருஷ்ணன், எச்​.​ராஜா, தமிழிசை சவுந்​தர​ராஜன், துணைத் தலை​வர்​கள் கரு.​நாக​ராஜன், வி.பி.துரை​சாமி, மகளிரணி தேசிய தலை​வர் வானதி சீனி​வாசன், சட்​டப்​பேரவை பாஜக தலை​வர் நயி​னார்நாகேந்​திரன் பங்​கேற்​றனர்.

தேசிய கல்விக் கொள்​கைக்கு ஆதர​வாக தமிழக பாஜக முன்​னெடுக்​கும் கையெழுத்து இயக்​கம், புதி​தாக தொடங்​கப்பட இருக்​கும் ‘சமக்​கல்​வி’ இணை​யதள பணி​கள், 2026 ​பேர​வைத் தேர்​தல், பாஜக​வின் களப்​பணி​கள் குறித்து கூட்​டத்​தில் விவாதிக்கப்பட்டது. பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் எச்.​ராஜா கூறிய​தாவது:-

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்​திய அரசு இது​வரை எந்த அறி​விப்​பும் வெளி​யிட​வில்​லை. இதுபற்றி தேர்​தல் ஆணை​ய​மும் எது​வும் குறிப்​பிட​வில்​லை. நாடாளு​மன்ற கூட்​டுக் குழு கூட்​டத்​தில் குடியரசு தலை​வர் பேசும்​போது தொகு​தி​கள் சீரமைப்பு குறித்து எதை​யும் அறிவிக்​காத நிலையில் முதல்​வர் ஸ்டா​லின் அனைத்​துக் கட்சி கூட்​டத்தை கூட்​டு​கிறார்.

மத்​திய அரசை எதிர்க்​கும் வித​மாக, அரசி​யல் ஆதா​யம் தேடும் வகை​யில் இந்த கூட்​டம் கூட்​டப்படு​கிறதே தவிர, அதற்​கான காரணம் தெளி​வாக இல்​லை. அரசு பள்​ளி​களில் பயிலும் மாணவர்​களின் எண்​ணிக்​கையை விட தனி​யார் பள்​ளி​களில் படிக்​கும் மாணவர்​களின் எண்​ணிக்கை அதி​க​மாக உள்​ளது. தமிழகத்​தில் உள்ள 1,600 மேற்​பட்ட பள்​ளி​களில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்​கும் மாணவர்​களின் எண்​ணிக்கைஒற்றை இலக்​கில்​தான் உள்​ளது. இதற்​கெல்​லாம் தீர்வு தேசிய கல்விக் கொள்​கை​யில் உள்​ளது.

ஆனால், அதை மறைத்து தேசிய கல்விக் கொள்​கையை மும்​மொழிக் கொள்கை எனக்​கூறி, அதில் இந்தி திணிப்பு என்ற பொய்​யான தகவலை பரப்பி வரு​கின்​றனர். எந்த மாநில​மும் அதன் விகி​தாச்​சார அடிப்​படை​யில் பாதிக்​கப்​ப​டாது என மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா தெளி​வாக சொல்​லி​யிருக்​கிறார். எனவே, திமுக சார்​பில் நடத்​தப்​படும் அனைத்​துக் கட்சி கூட்​டம் எந்த பலனும் இல்​லாதது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

பொன்​.​ரா​தாகிருஷ்ணன் கூறும்​போது, “மத்​திய அரசுக்கு எதி​ராகபோராடு​வதற்கு தயா​ராக கூடிய ஒரு கூட்​ட​மாகத்​தான் அனைத்​துக்கட்சி கூட்​டத்தை கூட்​டு​கின்​றனர். ஒரு கிளர்ச்​சிக்கு அனை​வரை​யும் தயா​ராக்​கு​கின்​றனர். 1962, 1967 கால​கட்​டத்​தில் திமுக ஆட்​சிக்கு வரு​வதற்கு என்​னென்ன தந்​திரங்​களை கடைபிடித்​தார்​களோ, அதே தந்​திரங்​களை மீண்​டும் கடைபிடித்​து, ஒரு மிகப்​பெரிய போ​ராட்​டத்​தை திணிப்​ப​தற்​காக இந்​த கூட்​டம்​ கூட்​டப்​படுகிறது” என்​றார்​.