நீட் கூட்​டத்தை அதி​முக புறக்​கணிக்க பாஜக நிர்​பந்​தமே காரணம்: முத்​தரசன்!

பாஜக​வுடன் பகை ஏற்​பட்​டு​விடும் என்​ப​தற்​காகவே, நீட் தொடர்​பான அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்தை பழனி​சாமி புறக்​கணித்​துள்​ளார். இவற்​றுக்கு பாஜக​வின் நிர்​பந்​தமே காரணம் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன் நாகை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது:-

அகில இந்​திய விவ​சா​யிகள் சங்​க​ மா​நாடு வரும் 15, 16, 17-ம் தேதி​களில் நாகை​யில் நடை​பெற உள்​ளது. இதில் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் டி.​ராஜா, தமிழக அமைச்​சர்​கள் எம்​ஆர்​கே.பன்​னீர்​செல்​வம், அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி, கேரள மாநில அமைச்​சர்​கள் மற்​றும் பல்​வேறு மாநிலங்​களில் இருந்து முக்​கிய தலை​வர்​கள் பங்​கேற்​கின்​றனர்.

பாஜக​வின் நிர்​பந்​தம் காரண​மாகவே தமிழக அரசுக்கு எதி​ராக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பேசி வரு​கிறார். தமிழக ஆளுநருக்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றம் அளித்த தீர்ப்பை அனை​வரும் வரவேற்ற நிலை​யில், அதி​முக மட்​டும் செய்வதறியாது திகைத்து, அமை​தி​யாக உள்ளது. பாஜக​வுடன் பகை ஏற்​பட்​டு​விடும் என்​ப​தற்​காகவே, நீட் தொடர்​பான அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்தை பழனி​சாமி புறக்​கணித்​துள்​ளார். இவற்​றுக்கு பாஜக​வின் நிர்​பந்​தமே காரணம். தமிழகத்​தில் காலூன்ற முடி​யாது என்​ப​தால் சீமானை தங்​கள் பக்​கம் இழுக்க பாஜக முயற்​சிக்​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்.