ராணாவை 18 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

மும்பை தாக்​குதல் வழக்​கில் தொடர்​புடைய தஹாவூர் ராணாவுக்கு 18 நாட்கள் தேசிய புலனாய்வு அமைப்பின் 18 நாள் காவலில் வைக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு மும்​பை​யில் நிகழ்ந்த தீவிர​வாத தாக்​குதல் வழக்​கில் தொடர்​புடைய தஹாவூர் ராணா (64) கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்​கா​வில் கைது செய்​யப்​பட்​டார். பாகிஸ்​தானைச் சேர்ந்த அவரை இந்​தி​யா​வுக்கு அழைத்து வர மத்​திய அரசுநடவடிக்கை மேற்​கொண்​டது. இந்​தி​யா​வின் கோரிக்​கையை ஏற்ற அந்​நாட்டு உச்ச நீதி​மன்​றம் ராணாவை இந்​தி​யா​வுக்கு நாடு கடத்த உத்​தர​விட்​டது. இதற்கு தடை கோரி ராணா மேற்​கொண்ட சட்ட ரீதி​யான முயற்​சிகள் அனைத்​தும் தோல்வி அடைந்​தன.

இந்​நிலை​யில், அவரை இந்​தி​யா​வுக்கு அழைத்து வரு​வதற்​காக தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ) மற்​றும் உளவு அமைப்​பான ஆராய்ச்சி மற்​றும் பகுப்​பாய்வு பிரிவு (ரா) அதி​காரி​கள் அடங்​கிய குழு அமெரிக்கா சென்​றது. இதையடுத்​து, அமெரிக்க அதி​காரி​கள் ராணாவை இந்​திய குழு​வினரிடம் நேற்று முன்​தினம் ஒப்​படைத்​தனர். இதையடுத்​து, ராணா இந்​திய விமானப்​படைக்கு சொந்​த​மான சிறப்பு விமானத்​தில் நேற்று டெல்​லிக்கு அழைத்து வரப்​பட்​டார்.

விமான நிலை​யம் வந்​தடைந்த அவரை என்ஐஏ அதி​காரி​கள் முறைப்​படி கைது செய்​தனர். பின்​னர் டெல்லி சிறப்பு நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்​ட அவரை 20 நாட்கள் தங்​கள் கட்​டுப்​பாட்​டில் வைத்து விசா​ரிக்க அதிகாரிகள் அனு​மதி கோரினர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் ராணாவை 18 நாட்கள் என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, ராணா மீதான வழக்கை மும்​பையி​லிருந்து டெல்லி சிறப்பு நீதி​மன்​றத்​துக்கு மாற்ற வேண்​டும் என்று தேசிய புல​னாய்வு முகமை​ (என்​ஐஏ) ஏற்​கெனவே கோரிக்கை வைத்​திருந்​தது. இதை ஏற்​றுக் கொண்ட டெல்லி மாவட்ட நீதி​மன்ற நீதிபதி விமல் குமார் யாதவ் கடந்த ஜனவரி 28-ம் தேதி மும்பை நீதி​மன்ற ஊழியர்​களுக்கு ஒரு உத்​தரவு பிறப்​பித்​திருந்​தார். அதில், மும்பை தீவிர​வாத தாக்​குதல் வழக்கு விசா​ரணை தொடர்​பான ஆவணங்​களை அனுப்பி வைக்​கு​மாறு கூறி​யிருந்​தார். இதன்​படி, அந்த ஆவணங்​கள் டெல்லி மாவட்ட நீதி​மன்​றத்​தில் சமீபத்​தில் ஒப்​படைக்​கப்​பட்​டன. இதையடுத்​து, ராணா மீதான வழக்கு டெல்​லி​யில் நடை​பெறும்.

அமெரிக்​கா​விலிருந்து அழைத்​து​வரப்​பட்ட தஹாவூர் ராணா டெல்லி பாட்​டி​யாலா ஹவுஸ் நீதி​மன்​றத்​தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்​து, நீதி​மன்ற வளாக பகு​தி​யில் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருந்​தன. குறிப்​பாக, துணை ராணுவப் படை​யினர் மற்​றும் டெல்லி போலீ​ஸார் அப்​பகு​தி​யில் குவிக்​கப்​பட்​டனர்.