சிறந்த வாய்ப்​புக்​காக இந்​திய இளைஞர்​கள் காத்​திருக்​கின்​றனர்: ராகுல் காந்தி!

சிறந்த வாய்ப்​புக்​காக இந்​திய இளைஞர்​கள் காத்​திருக்​கின்​றனர் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்​கிரஸ் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்​தி, தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது:-

நாட்​டில் உள்ள இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு அதி​கரிக்க கடந்த ஆண்டு வேலை​யுடன் கூடிய ஊக்​கத் தொகை (இஎல்ஐ) திட்​டத்தை மத்​திய அரசு அறி​வித்​தது. அதற்​காக ரூ.10,000 கோடி ஒதுக்​கப்​பட்​டது. ஆனால், இது​வரை வேலை​வாய்ப்​பு​கள் அதி​கரிக்​கப்​பட​வில்​லை. ஒதுக்​கப்​பட்ட தொகை எங்கே போனது?

நாட்​டில் உள்ள பெரிய நிறு​வனங்​களின் மீது மட்​டுமே பிரதமர் மோடிக்கு கவனம் உள்​ளது. நாட்​டின் வளர்ச்​சி​யில் சிறு, குறு, நடுத்தர நிறு​வனங்​கள்​தான் முக்​கிய பங்கு வகிக்​கின்​றன. அவற்றை மத்​திய அரசு புறக்​கணிக்​கிறது. கடந்த 2024-ம் ஆண்டு மக்​களவை தேர்​தலுக்கு முன்​பு, இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு வழங்க இஎல்ஐ திட்​டம் கொண்டு வரப்​படும் என்று பாஜக அறி​வித்​தது. ஆனால் ஆட்சி பொறுப்​பேற்று ஓராண்​டாகி​யும் அந்த திட்​டம் குறித்து இது​வரை எந்த விளக்​க​மும் தரவில்​லை.

பெரு நிறு​வனங்​களை மட்​டுமே கவனத்​தில் கொண்​டால், வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்க முடி​யாது. உள்​நாட்டு உற்​பத்​தி​யும், இந்​திய திறனை​யும் மனதில் கொண்​டு, சிறு, குறு, நடுத்தர நிறு​வனங்​களுக்கு அதிக முக்​கி​யத்​து​வம் தந்து முதலீடு​களை அதி​கரிக்க வேண்​டும். உள்​ளூர் தயாரிப்​பு​களை ஊக்​குவிக்க வேண்​டும். நீங்​கள் (பிரதமர் மோடி) தின​மும் ஒரு ஸ்லோகனை வெளி​யிடு​கிறீர்​கள். ஆனால், சிறந்த வாய்ப்​புக்​காக இந்​திய இளைஞர்​கள் காத்​திருக்​கின்​றனர். இவ்​வாறு ராகுல் காந்தி கூறி​யுள்​ளார்.

ராகுல் கருத்​துக்கு பாஜக கடும் கண்​டனம் தெரித்​துள்​ளது. இதுகுறித்து பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மால்​வியா தனது எக்ஸ் பதி​வில், பாஜக ஆட்​சி​யில் உரு​வாக்​கப்​பட்​டுள்ள புதிய வேலை​வாய்ப்பு விவரங்​கள், வேளாண் துறை வலிமைப்​படுத்​தி​யது, சேவை துறை​களை மேம்​படுத்​தி​யது போன்​றவற்​றின் பட்​டியலை வெளி​யிட்​டுள்​ளார். மேலும், காங்​கிரஸ் தலை​மையி​லான யுபிஏ ஆட்​சி​யில் இந்​திய பொருளா​தா​ரம் எப்​படி இருந்​தது என்​ப​தற்​கான ஆதா​ரங்​களை​யும் அமித் மால்​வியா பட்​டியலிட்​டுள்​ளார். பாஜக அரசின் சாதனை​களை திட்​ட​மிட்டு உண்​மை​களை திரித்து கூறுகிறது காங்​கிரஸ்​ என்​று அவர்​ கண்​டனம்​ தெரி​வித்​துள்​ளார்​.