மேற்கு வங்கத்தில் வக்பு சட்டத்தை எதிர்த்து வன்முறை: 3 பேர் உயிரிழப்பு!

வக்பு சட்​டத்தை எதிர்த்து நடை​பெற்ற வன்​முறை, போராட்ட சம்​பவங்​களில் மேற்கு வங்க மாநிலத்​தில் 3 பேர் உயி​ரிழந்​துள்​ளனர்.

வக்பு சட்​டத்​திருத்த மசோ​தா, நாடாளு​மன்​றத்​தின் 2 அவை​களி​லும் நிறைவேற்​றப்​பட்டு குடியரசுத் தலை​வர் ஒப்​புதலுக்கு அனுப்​பப்​பட்​டது. அதற்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு​வும் ஒப்​புதல் அளித்​து​விட்​டார். இதைத் தொடர்ந்து வக்பு சட்​டம் நாடு முழு​வதும் அமலுக்கு வந்​துள்​ளது. இந்​நிலை​யில், இந்த சட்​டத்தைஏற்க மறுத்து பல்​வேறு முஸ்​லிம் அமைப்​பு​கள் நாடு முழு​வதும் தொடர்ந்து போராட்​டங்​களை நடத்தி வரு​கின்​றன. குறிப்​பாக மேற்கு வங்​கத்​தில் இந்​தச் சட்​டத்தை எதிர்த்து போராட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

இந்​நிலை​யில் மேற்கு வங்​கத்​தில் நடை​பெற்ற போராட்​டத்​தின்​போது வன்​முறை வெடித்​துள்​ளது. குறிப்​பாக முர்​ஷி​தா​பாத்மாவட்​டத்​தில் நடை​பெற்ற போராட்​டம் வன்​முறை​யாக மாறியது. இங்கு போராட்​டத்​தில் ஈடு​பட்ட ஒரு கும்​பல், அங்​குள்ள வாக​னங்​களை தீயிட்டு கொளுத்​தி​யது. மேலும் போலீ​ஸார் மீதும் கல்​வீசி தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது. இதைத் தொடர்ந்து அந்த கும்​பல் முர்​ஷி​தா​பாத்​தின் நிம்​ரிட்டா ரயில் நிலை​யத்​தை சூறை​யாடி விட்டு தப்​பியது.

இதனிடையே ஜாங்​கிபூர் பகு​தி​யில் நடை​பெற்ற போராட்​டத்​தில் குதித்த ஒரு கும்​பல் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி எம்​பி​யான காலிலுர் ரஹ்​மான் அலு​வல​கத்தை சூறை​யாடி​யுள்​ளது.முர்​ஷி​தா​பாத்​தில் நடந்த வன்​முறைச் சம்​பவங்​களின்​போது தந்​தை, மகன் ஆகிய 2 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். ஜாப்​ரா​பாத்​தைச் சேர்ந்த அவர்​களது உடல்​கள் கத்​திக்​குத்து காயங்​களு​டன் காணப்​பட்​டன. வன்​முறைச் சம்​பவங்​களின்​போது அவர்​களது வீட்​டுக்​குள் புகுந்த வன்​முறை கும்​பல் வீட்டை கொள்​ளை​யடித்த பின்​னர் இரு​வரை​யும் கத்​தி​யால் குத்​தி​விட்டு தப்​பியோடி​யுள்​ளது.

இதனிடையே வன்​முறைச் சம்​பவங்​களில் ஈடு​பட்​ட​தாக 118 பேரை போலீ​ஸார் இது​வரை கைது செய்​துள்​ளனர். வன்​முறைச் சம்​பவத்​தைத் தொடர்ந்து முர்​ஷி​தா​பாத், ஜாங்​கிபூர் பகு​தி​களில் போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டுள்​ளனர். அங்​குள்ள முக்​கிய பகு​தி​களில்​ போலீ​ஸார்​ ரோந்​து சுற்​றி வருகின்​றனர்​

வன்முறையில் 3 பேர் உயி​ரிழந்​த​தாக​வும், போலீஸ் துப்​பாக்​கிச்​சூட்​டில் ஒரு​வர் உயி​ரிழந்​த​தாக​வும் மாநில கூடு​தல் போலீஸ் டிஜிபி (சட்​டம் ஒழுங்​கு) ஜாவேத் ஷமிம் தெரி​வித்​தார். இந்​நிலை​யில் வன்​முறை நடந்த முர்​ஷி​தா​பாத், ஜாங்​கிபூர் பகு​தி​களில் மத்​திய படைகளை அனுப்​பு​மாறு கொல்​கத்தா உயர் நீதி​மன்​றத்​தி​லுள்ள சிறப்பு அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.