தமிழகத்தில் 4 இடங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசிக்கு மத்திய அரசு அனுமதி!

தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் 4 இடங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசி (Oil and Natural Gas Corporation Limited ONGC) நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மற்றும் சென்னை அருகே ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இந்தியாவின் மொத்தம் 28 இடங்களில் ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க ஓஎன்ஜிசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் 4 இடங்களும் அடங்கும். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியின் தென்முனைப் பகுதி மற்றும் சென்னைக்கு அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதித்திருக்கிறது.

இந்த ஆழ்கடல் எண்ணெய் எரிவாயு திட்டத்துக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் சுற்றுச் சூழல் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையும் மீறி தற்போது ஓஎன்ஜிசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.