சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் அனுபவ வரிசையில் 43-வது இடத்தில் சத்திய நாராயணா உள்ளார். நீதிபதி சத்திய நாராயணா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறாரக்ள்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 56. நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் உயிரிழந்து இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு சத்திய நாராயணா பதவி உயர்வு பெற்றார். பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக அவர் நியமனம் செய்யப்பட்டார். பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டு தீர்ப்பு வழங்கிய நீதிபதி சத்திய நாராயணா நீதிபதிகளின் அனுபவர்கள் வரிசையில் 42-வது இடத்தில் இருந்தார். தஞ்சையை சேர்ந்த சத்திய நாராயண பிரசாத், 1997 ஆம் ஆண்டில் இருந்து 24 வருடங்கள் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பாக, பிஎஸ் என்.எல், சென்னை துறைமுகம் அறக்கட்டளை, இந்தியன் வங்கி, தெற்கு ரயில்வே உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மாரடைப்பால் உயிரிழந்து இருக்க கூடிய தகவல் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி சத்திய நாராயண பிரசாத் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சத்தியநாராயண பிரசாத் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
நீதிமுறைமைக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளியைக் குறைக்கும் வகையில் மக்களோடு மக்களாகப் பழகி எளிமையின் அடையாளமாய் திகழ்ந்த நீதியரசர் சத்தியநாராயண பிரசாத் அவர்களின் மறைவு நீதித்துறைக்கு மட்டுமின்றி தமிழ் மண்ணிற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
நீதியரசர் சத்தியநாராயண பிரசாத் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், வழக்கறிஞர் பெருமக்கள், நீதித்துறை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். மாண்பமை நீதியரசர் சத்தியநாராயண பிரசாத் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.