பதவிக்காக மாநில உரிமையை அடகு வைக்க மாட்டோம் என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே? முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு, கச்சத்தீவு போன்ற ஜீவாதாரபிரச்சனைகளுக்கு தொடர்ந்து வாய்மூடி மௌனமாய் இருப்பது ஏன் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
நாளை கூடும் திமுக பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்து அதில் ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் பதவிக்காக மாநில உரிமைகளை அடகு வைக்க மாட்டோம் என்று அவர் எழுதி உள்ளார். முல்லைப் பெரியாறு நம்முடைய மாநில உரிமை என உச்சநீதிமன்றத்தில் ஒரு தொடர் சட்ட போராட்டத்தை புரட்சித்தலைவி அம்மா நடத்தி அணையை 142 அடியாக தேக்கி கொள்ளலாம், பேபி அணியை சீர் செய்த பின்பு 152 அடியாக தேக்கிகொள்ளலாம் என மாநில உரிமையை பெற்று தந்தார் இந்த நான்காண்டுகளில் அவர் செயல்படுத்தவில்லை.
அம்மா பெற்று தந்த இந்த தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு ஒரு முறையாவது வாய் திறந்து தனது கூட்டணியைச் சேர்ந்த கேரளா முதலமைச்சர் பிரணாய் விஜயனிடம் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளாரா?
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலே தென் மாவட்டகளான தேனி, மதுரை திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுடைய இந்த ஜீவாதார மாநில உரிமையை காப்பதற்கு ஒரு முறையாவது அவர் கோரிக்கை வைத்தாரா என்பதை மனசாட்சியை தொட்டு அவர் விவரங்களை வெளியிடுவதற்கு தயாரா?
கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் இங்கே முதலமைச்சர் அழைப்பை ஏற்று பங்கேற்ற கூட்டத்திலே செய்தியாளர்களிடம் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்றும், தமிழ்நாட்டிலே வந்து மேகதாது அணையின் அவசியம் என்று அவர் ஒரு விளக்கம் சொல்கிறார். இந்த நிமிடம் வரை அதற்கான மறுப்பு சொல்ல முதலமைச்சர் முன்வரவில்லை?
காவேரி பிரச்சனையில் மௌனம், முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மௌனம், கச்சதீவு பிரச்சினையில் மௌனம், பாலாறு பிரச்சினை மௌனம். ஆனால் தற்போது மாநில உரிமைக்காக பதவி அடகு வைக்க மாட்டேன் என்று முதலமைச்சர் சொல்வது ஒரு நகைச்சுவையாக தான் பார்க்க வேண்டுமா? அல்லது இதனுடைய உண்மைத் தன்மை என்ன? இன்றைக்கு மாநில உரிமை என்று முதலமைச்சர் எதை பார்க்கிறார் தன் வாரிசு மகன் அரசு பதவிக்காக உரிமை என்பதை அவர் எடுத்துச் சொல்லுகிறாரா? நாங்கள் ஒருபோதும் மகனின் அரசியல் அதிகாரத்தை விட்டுத்தர மாட்டோம் என்று சொல்ல முன் வருகிறாரா?
இதே எடப்பாடியார் ஆட்சியில் நாடாளுமன்றத்தில் 22 நாட்கள் அவையை முடக்கி காவிரி உரிமையை பெற்றுக் கொடுத்துள்ளோம்
நீட் தேர்வு ரத்து என்கிற அறிவிப்பை வாங்கி கொடுத்திருக்கிறீர்களா? அதேபோல ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எடப்பாடியார் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார், நீங்கள் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை
இதைவிட இன்றைக்கு மதுரை அல்லோப்பட்டு கொண்டிருக்கிறது எல்லா பத்திரிகைகளும் தலைப்பு செய்தியாக முதல்வர் வருகையால் மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம் என்பது தான். எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த பொழுது மதுரைக்கு 65 முறை வருகை தந்தார் குறிப்பாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, இளைஞர் மாநாடு, குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டு விழா இப்படிவளர்ச்சி திட்டங்களுக்கு மதுரைக்கு வந்த போது போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை மக்களோடு, மக்களோக தான் கடந்து சென்றார்
இன்றைக்கு ஸ்டாலின் ரோடு ஷோ என்கிற பெயரிலே இன்றைக்கு நடத்துகிற இந்த நாடக அரங்கேற்றத்தை மக்கள் எப்படி பொறுத்துக் கொள்வார்கள்?
ஏதேனும் ஒரு இந்த மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய, வளர்ச்சி தரக்கூடிய, வறுமையை போக்கக்கூடிய வளமான வாழ்வை உருவாக்கக்கூடிய ஒரு திட்டங்களை அறிவிக்கிறேன் என்று சொல்லி அவரை வரவேற்றாலும் கூட பரவாயில்லை .கட்சிக் கூட்டத்திலே பங்கேற்பதற்கு வருவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. அதற்காக மதுரை மக்களை இன்றைக்கு நாம் எப்படி எல்லாம் கஷ்டப்படுத்துகிறோம் என்பதை ஒரு நிமிடம் அவர்கள் சிந்திக்க வேண்டும்.
ஆனால் இவ்வளவு போக்குவரத்து மாற்றம் எதற்கு? பெருங்குடி அவனியாபுரத்தில் தொடங்கி இங்கே தனியார் அந்த தங்கும் விடுதி வரை இங்கே எல்லாம் போலீஸை குவிக்கப்பட்டு, மக்களை அலைக்கழிக்கப்படலமா?
இன்றைக்கு பத்திரிக்கையில் முதலமைச்சர் வருகிறார் போக்குவரத்து மாற்றம் என்று பக்கம் பக்கமாக செய்தி வருகிறது. இந்த போக்குவரத்து மாற்றம் என்பது ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமாக அமையும். இதுதான் மதுரை மக்களின் தீர்ப்பாக அமையும். ஏனென்றால் இது கண்ணகி நீதி கேட்ட மதுரை, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை. ஆகவே இந்த மதுரை மக்களை அவர்கள் அலோங்கோலபடுத்தவது என்பது ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை இன்னைக்கு நாங்கள் வன்மையாக தெரிவித்துக் கொள்கிறோம்.
நிச்சயம் ஆட்சி மாற்றம் அடித்தளமாக இந்த ரோடு ஷோ அமையும் அடுத்த ஆண்டு முதலமைச்சராக எடப்பாடியார் வருவார். அதுபோல ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக கூட வர முடியாது சூழ்நிலை உருவாகும்
எப்போதோ வரப்போகிற இந்த பேராபத்தை இப்போதே நாங்கள் அடையாளப்படுத்துகிறோம் என்பது போலத்தான் இந்த விழா அமைந்திருக்கிறது. ஆகவே இது பொதுக்குழுவா அல்லது மக்களை கசக்கி பிழிகிற, மக்களுக்கு கஷ்டங்களை தருகிற, வேதனை தருகிற, கவலையை தருகிற குழுவா என்பதை மக்கள் சார்பில் நான் முன்வைக்கிறேன்.ஒருநாளும் மக்கள் தண்டனையிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது
மாநில உரிமையை இழக்க மாட்டேன் என்று கூறி உங்கள் மகன் வாரிசு அரசியலுக்காக மாநில உரிமையை விற்பனை செய்து விட்டீர்கள். திமுகவில் இருந்து காப்பாற்றுவதற்கு அன்னை மீனாட்சி துணை நிற்பார், மதுரை மக்களே நீங்கள் கவலைப்படாதீர்கள் காலம் மாறும் காட்சிகள் மாறும் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சர் வருவார் அப்போது மதுரை மாவட்ட வளர்ச்சி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.