நாங்​களும் திமுக கூட்​ட​ணி​யில் அதிக தொகு​தி​கள் ஒதுக்க கேட்​போம்: திருமாவளவன்!

நாங்​களும் இந்த முறை திமுக கூட்​ட​ணி​யில் அதிக தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும் என்று கேட்​போம் என விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் எம்​.பி கூறினார்.

பெரம்​பலூரில் செய்​தி​யாளர்​களிடம் திரு​மாவளவன் கூறிய​தாவது:-

தமிழகத்​தில் அதி​முக உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகளை ஒருங்​கிணைத்து வலு​வான கூட்​டணி அமைக்க வேண்​டும் எனும் அமித்​ஷா​வின் எண்​ணம் இன்​னும் கைகூட​வில்​லை. ஏற்​கெனவே அவர்​கள் கூட்​ட​ணி​யில் இருந்த பாமக, தேமு​திக கட்​சிகள்​கூட கூட்​ட​ணி​யில் இணைய தயக்​கம் காட்டி வரு​கின்​றன. தவெக-வை கூட்​ட​ணி​யில் இணைக்க போராடி வரு​கின்​றனர். கூட்​ட​ணியை உரு​வாக்​கவே இவ்​வளவு பாடுபட வேண்​டிய சூழ்​நிலை​யில், ஆட்​சி​யைக் கைப்​பற்​று​வோம் எனக் கூறு​வது நகைப்​புக்​குரியது.

ஒரு​வேளை வாக்​குப்​ப​திவு இயந்​திரத்தை அவர்கள் தவறாகப் பயன்​படுத்​தி​னாலும்​கூட தமிழகத்​தில் ஒரு இடத்​தி​லும் அவர்​களால் வெற்​றி​பெற முடி​யாது. எத்​தனை ஆன்​மிக மாநாடு​களை நடத்​தி​னாலும், தமிழகத்​தில் அவர்​கள் வெற்​றி​பெற முடி​யாது. இவ்​வாறு அவர்​ கூறினார்​.

அரியலூரில் திரு​மாவளவன் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “கூட்​ட​ணி​யில் உள்ள கட்​சிகள் கடந்த முறையை​விட கூடு​தல் தொகு​தி​கள் கேட்​பது இயல்​பு. மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் சண்​முகம் கூறி​யுள்​ளது​போல, நாங்​களும் இந்த முறை திமுக கூட்​ட​ணி​யில் அதிக தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும் என்று கேட்​போம். ஆனால், பேச்​சு​வார்த்தை அடிப்​படை​யில் இறுதி முடிவை எடுப்​போம்” என்​றார்​.