திமுகவை முரு​கப் பெரு​மான் ஓட ஓட விரட்​டப் போகிறார்: எல்.முருகன்!

நாமக்கல்: முருக பக்​தர்​கள் மாநாடு மூலம் திமுக அரசுக்கு முடிவுரை எழுதப்​படும் என்று மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் கூறி​னார்.

நாமக்​கல்​லில் செய்​தி​யாளர்​களிடம் எல்​.​முரு​கன் கூறிய​தாவது:-

சீர்​மிகு நகரத் திட்​டத்​தைத்​தான் சிங்​காரச் சென்னை என்று திமுக​வினர் கூறுகின்​றனர். மத்​திய அரசின் திட்​டங்​கள் அனைத்​தை​யும், மாநில அரசு செய்​தது​போல காட்​டு​வது திமுக​வின் வேலை.

2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுகவை முரு​கப் பெரு​மான் ஓட ஓட விரட்​டப் போகிறார். தேசிய ஜனநாயகக் கூட்​டணி பலமிக்க வலிமை​யான கூட்​ட​ணி​யாக உள்​ளது. இதைப் பொறுத்​துக் கொள்ள முடி​யாமல், திமுக கூட்​டணி கட்​சி​யினர் மாற்றி மாற்​றிப் பேசுகின்​றனர். மதுரை​யில் வரும் 22-ம் தேதி நடை​பெறும் முருக பக்​தர்​கள் மாநாடு மூலம் திமுக அரசுக்கு முடிவுரை எழுதப்​படும்.

திமுக கூட்​ட​ணியி​லிருந்து எப்​போது வேண்​டு​மா​னாலும், யார் வேண்​டு​மா​னாலும் வெளி​யேறலாம். மக்​களைப் பாது​காக்க, திமுகவை ஆட்​சி​யில் இருந்து அகற்ற யாரெல்​லாம் தயா​ராக இருக்​கிறார்​களோ, அவர்​கள் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் இணை​ய​லாம். முருக பக்​தர்​கள் மாநாட்​டுக்​கு, கூட்​ட​ணிக் கட்​சி​யான அதி​முக​வுக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது.

கீழடி மட்​டுமல்ல, ஆதிச்​சநல்​லூர் அகழாய்​வை​யும் மத்​திய அரசு​தான் மேற்​கொள்​கிறது. இறு​திக்​கட்ட முடிவுக்கு முன்​னர், அதற்கு என்​னென்ன தேவையோ அது கேட்​கப்​பட்​டுள்​ளது. தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் தமிழக தலை​வர் அதிமுக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி என மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தெளி​வாகக் கூறி​யுள்​ளார்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.