1950 ஆம் ஆண்டு ரயில் தடம் புரண்ட போது லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே இதே தார்மீக அடிப்படையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து துறை அமைச்சர் நாயுடு ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் சுப்பிரமணியணியன் சுவாமி கூறியிருப்பதாவது:-
1950 ஆம் ஆண்டு ரயில் தடம் புரண்ட போது லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே இதே தார்மீக அடிப்படையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து துறை அமைச்சர் நாயுடு ஆகியோர் பதவி விலக வேண்டும். அப்போது தான் நியாயமான சுதந்திரமான விசாரணை நடைபெறும். மோடியும் அவரது சகாக்களும் இதுவரை சுற்றி சுற்றிதான் வருகிறார்கள். இது முதலில் நிறுத்தப்பட வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
பாஜகவில் இருந்தாலும் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வருபவர் சுப்பிரமணியன் சுவாமி. தனது எக்ஸ் தளத்தில் பல்வேறு விஷயங்களில் பிரதமர் மோடியை கடுமையாக சாடி வரும் சுப்பிரமணியன் சுவாமி இன்று நடைபெற்ற விமான விபத்து தொடர்பாக பதிவிட்டு மோடியை பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக இன்று பிற்பகல் 1.40 மணியளவில் நாட்டையே உலுக்கும் வகையில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. குஜராத்தின் அகமதாபாத் நகரில் இருந்து 242 பேருடன் லண்டன் புறப்பட்ட விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. ஏஐ171 (AI)171 என்ற எண் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானது. உடல்களை அடையாளம் காண ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் இதுவரை விபத்தில் சிக்கியது இல்லை என்று சொல்லப்படுகிறது. மிகவும் பாதுகாப்பான விமானமாக கருதப்படும் போயிங் டீரிம்லைனர் விமானத்தை ஏர் இந்தியா கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பாக வாங்கியுள்ளது. ஏர் இந்தியா 171 என்ற எண் கொண்ட இந்த விமானத்தில் 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் பயணித்தனர். இந்த விமான விபத்தில் ஒருவரும் உயிர் பிழைத்து இருக்க வாய்ப்பு இல்லை என்று அகமதாபாத் சுகாதாரத்துறை தெரிவித்தது. அகமதாபாத் மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குஜராத் சுகாதாரத்துறை செயலலாளர் தனஞ்செய் திரிவேதி தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் உறவினர்களிடம் டிஎன்.ஏ மாதிரிகளை சேகரிக்க மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.