இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்ட திமுக: அன்புமணி!

மாணவர்​கள் நடத்​திய இந்தி எதிர்ப்பு போராட்​டத்​துக்கு திமுக ஸ்டிக்​கர் ஒட்​டிக்​கொண்​டது என்று பாமக தலை​வர் அன்​புமணி கூறி​னார்.

வேலூரில் நேற்று நடை​பெற்ற பாமக பொதுக்​குழுக் கூட்​டத்​தில் பங்​கேற்ற கட்​சித் தலை​வர் அன்​புமணி பேசி​ய​தாவது:-

பல்​வேறு துறை​களி​லும் தமிழகம் பின்​னோக்கி சென்று கொண்​டிருக்​கிறது. மக்​கள் விரோத திமுகவை அகற்ற வேண்​டும். அடித்​தட்​டு, பின்​தங்​கிய மக்​களை மேம்​படுத்த எந்த திட்​ட​மும் செயல்​படுத்​தப்​பட​வில்​லை. மேலும், சமூக நீதியை நடை​முறைபடுத்​த​வும் திமுக தவறி​விட்​டது. கிராமங்​களில் பாமக உறுப்​பினர் சேர்க்​கையை தீவிரப்​படுத்த வேண்​டும். ஜூலை 25-ல் ராம​தாஸ் பிறந்த நாளில் தமிழக மக்​களின் உரிமை​களை மீட்​டெடுக்க நடைபயணம் மேற்​கொள்ள உள்​ளேன்.

தமிழகத்​தில் ரூ.10 லட்​சம் கோடிக்கு புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ள​தாக கூறுகிறார்கள். ஆனால், எவ்​வளவு முதலீடு வந்​துள்​ளது என்று கேட்​டால், அதற்கு பதில் அளிப்​ப​தில்​லை. தமிழகத்​தில் மாணவர்​கள் நடத்​திய இந்தி எதிர்ப்​புப் போராட்​டத்​துக்​கு, திமுக ஸ்டிக்​கர் ஒட்​டிக் கொண்​டது. சித்​திரை முழு நிலவு மாநாட்​டைப் பார்த்து திமுக அரண்டு போயுள்​ளது. இடஒதுக்​கீடுவழங்​காமல் ஏமாற்​றிய திமுக​வுக்​கு, வரும் தேர்​தலில் வன்னியர் சமூகத்​தினர் தக்க பாடம் புகட்ட வேண்​டும்.

குட்கா, புகையிலை உள்ளிட்டவை குறித்து நான் பேசாமல் இருக்க எனக்கு பல கோடி ரூபாய் தர முன் வந்தனர். இது போன்ற பல லாபிகளை பார்த்துள்ளேன். அத்தனை லாபிகளையும் தன்னந்தனியாக எதிர்த்தவன் இந்த அன்புமணி ராமதாஸ். நான் குட்கா, புகையிலை குறித்து பேசுவதை தடுத்து என் வாயை அடைக்க யார் யார் மூலமாகவோ வந்து பேரம் பேசினர். “உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறோம். நீங்கள் வாயை திறக்காமல் அமைதியாக இருந்தால் போதும்” என்றார்கள். குட்கா குட்கா குறித்து நான் பேசாமல் இருக்க ரூ 1000 கோடி தருவதாக அன்று சொன்னார்கள். புகையிலை லாபிக்கு ரூ 5000 கோடி தருவதாக சொன்னார்கள். எங்கு எப்படி வேண்டும் என சொல்லுமாறு கேட்டார்கள். நான் நினைத்திருந்தால் அந்த பணத்தை வாங்கிக் கொண்டு எப்படியோ இருந்திருப்பேன். ஆனால் எனக்கு பணம் முக்கியமில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் முக்கியம். இந்தியாவில் உள்ள இளைஞர்களின் நலன் முக்கியம். நான் மன உறுதியோடு இருந்தேன். பணம் வேண்டுமானால் எப்படியும் சம்பாதிக்கலாம். நமது கட்சியின் நற்பெயர்தான் முக்கியம்.

இன்னும் 8 மாதங்களில் இந்த திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பாமகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம். திமுக பாமகவுக்கு துரோகம் செய்தது. பாமகவுக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காகவே நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன். நாம யார எதிர்க்கணும், நமக்கு யாரு எதிரி? அமைதியாக இருப்பது பலவீனம் அல்ல.. பலம்.. திமுக மூலமாக நமது கட்சியில் நடக்கும் சூழ்ச்சியை நிச்சயம் முறியடிப்போம். இவ்வாறு அன்புமணி பேசினார்.