ஜனவரி 1, 2022 முதல் ஏடிஎம்பயன்பாடுகளுக்கு கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது.

ஏடிஎம்மில் பணம் எடுப்பது இன்னும் கடினமான அனுபவமாக போகிறது. ஜனவரி 1, 2022 முதல் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க மற்றும் மற்ற பயன்பாடுகளுக்கு கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி வங்கிகளில் ஒரு மாதத்திற்கு 5 முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளும் முறை இருந்து வருகின்றது. ஒவ்வொரு மாதமும், மாநகராட்சிப் பகுதியில் வேறு வங்கியின் ஏடிஎம்களில் 3 முறையும், மாநகராட்சி அல்லாத பகுதிகள் என்றால் 5 முறையும் இலவசமாக பணமெடுக்கலாம். இதற்கு மேல் பணமெடுத்தால் சேவைக் கட்டணம் 20 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி அந்த கட்டணம் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.