ஊரடங்கு: காவலர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்!

அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்ய கூடாது.

அடையாள அட்டையுடன் பயணிக்கும் பணியாளர்களை உடனே அனுமதிக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகளுக்கு செல்வோர் அழைப்பு கடிதத்தை காண்பித்தால் அனுமதிக்க வேண்டும்.

அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோர், பணி முடிந்து திரும்புவோரை அனுமதிக்க வேண்டும்.

ஊரடங்கு வாகனச்சோதனையின் போது கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

பத்திரிகை, மருத்துவம், பால், மின்சாரம், சரக்கு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்களை அனுமதிக்க போலீசாருக்கு காவலர்களுக்கு டிஜிபி அறிவுறுத்தல்.