காங்கிரஸ்லிருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத் புதிய கட்சி துவக்கம்!

காங்கிரஸ்லிருந்து வெளியேறிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் புதிய கட்சி பற்றி அறிவிப்பு.

தொடங்கப்போகும் புதிய கட்சிக்கு கொடி மற்றும் பெயர் குறித்து காஷ்மீர் மக்கள் முடிவு செய்வார்கள். அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், ‘ஹிந்துஸ்தானி’ பெயர் சூட்டப்படும் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார் .

காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடந்த மாதம் அந்த கட்சியில் இருந்து விலகினார். குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சி மூலம் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் காங்கிரசில் இருந்து விலகிய அவர் புதிய கட்சியை தொடங்கி பாஜக உடன் சேர்ந்து தேர்தலை சந்திப்பார் என்றும் கூறப்பட்டது.

இது குறித்து ஜம்மு காஷ்மீர் பொதுகூட்டத்தில் அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் சார்பில் சிறை செல்பவர்கள் போலீஸ் டிஜிபி மற்றும் கமிஷனர்களை அழைத்து தங்களது பெயரை எழுதி கொடுத்துவிட்டு, ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு சென்று விடுகின்றனர். இதனால் தான் காங்கிரசால் வளர முடியவில்லை. காங்கிரஸ் நமது ரத்தத்தால் உருவாக்கப்பட்டது. கணினி மற்றும் டுவிட்டரால் உருவாக்கப்படவில்லை. கட்சியில் சிலர் எங்கள் மீது அவதூறு பரப்புகின்றனர். ஆனால், அவர்களால் சமூக வலைதளங்களில் மட்டுமே பார்க்க முடியும். இது போன்ற காரணங்களால், களத்தில் காங்கிரசை பார்க்க முடியவில்லை.

தொடங்கப்போகும் புதிய கட்சிக்கு என்ன பெயர் வைப்பது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. கட்சியின் கொடி மற்றும் பெயர் குறித்து காஷ்மீர் மக்கள் முடிவு செய்வார்கள். அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், ‘ஹிந்துஸ்தானி’ பெயர் சூட்டப்படும். மாநிலத்திற்கு அந்தஸ்தை பெறவும், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் நிலம் பெற்றுத்தரவும் வலியுறுத்துவோம். இவ்வாறு குலாம் நபி ஆசாத் பேசினார்.