காஷ்மீரில் காந்த வெடிகுண்டுகளுடன் ஒருவர் கைது!

ஜம்மு – காஷ்மீரில் பிடிபட்ட பயங்கரவாதியிடம் இருந்து காந்த வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சோபோர் நகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் சஹீப் ஷகீல் அக்தர் என்ற பயங்கரவாதி பிடிபட்டார். அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி துப்பாக்கிக் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அவரிடம் நடத்திய விசாரணையில் வாகனங்களில் ஒட்டி வைக்கும் காந்த வெடிகுண்டுகளை ஒரு பழத்தோட்டத்தில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. பாதுகாப்பு படையினர் அங்கு சென்று அவற்றை கைப்பற்றினர்

ஜம்முவில் இதற்கு முன் இதேபோன்ற காந்த வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பேரழிவை ஏற்படுத்தும் இந்த காந்த வெடிகுண்டுகளை பயங்கரவாதிகள் வாகனங்களில் ஒட்டி வைத்து விடுவர். இது வெடித்தால் அந்த வாகனமே முற்றிலும் வெடித்துச் சிதறி விடும்.