மும்பையில் அமித்ஷாவின் பாதுகாப்பில் இடையூறு ஏற்படுத்தியவர் கைது!

மும்பையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாதுகாப்பில் இடையூறு ஏற்படுத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பைக்குச் சென்றிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாதுகாப்பை மீறி ஆந்திரத்தைச் சேர்ந்த எம்பி ஒருவரின் தனிப்பட்ட உதவியாளர் போல் ஆள்மாறாட்டம் செய்ததாக ஒருவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நிகழ்ச்சிகள் நடைபெற்ற இரண்டு இடங்களிலும் அவர் காணப்பட்டதாகவும் போலீசார் கூறினர்.

குற்றம் சாட்டப்பட்டவர், மகாராஷ்டிரத்தின் துலேயைச் சேர்ந்த ஹேமந்த் பவார், மலபார் ஹித் காவல்நிலையத்தால் கைது செய்யப்பட்ட பின்னர், நீதிமன்றத்தால் 5 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார்.