பெண்கள் பாதுகாப்பாக இருந்தால்தான் இந்தியா முன்னேறும்: ராகுல் காந்தி!

பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் தான் இந்தியா முன்னேறும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல்காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மற்றும் உத்தரகண்ட் மாநிலம் பௌரி ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

உத்தரகண்ட் மாநிலம் பௌரி மாவட்டத்தில் பெண் வரவேற்பாளரைக் கொன்றதாக பாஜக தலைவரின் மகனும் அவருக்குச் சொந்தமான விடுதியில் 2 ஊழியர்களும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், மொராதாபாத்தில் சாலையில் பெண் ஒருவர் நிர்வாணமாக நடந்து செல்வத்தைக் கண்ட போலீசார் வழக்குப் பதிவு செய்த, 15 வினாடிகளில் சிசிடிவி காட்சிகள் ஆன்லைனில் வெளிவந்தன. மொராதாபாத் மற்றும் உத்தரகண்ட்டில் பெண்களுக்கு நிகழ்ந்த சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர்.

பாரத் ஜோடோ யாத்திரையில், நான் பல திறமையான மற்றும் இளம் பெண்களைச் சந்தித்து கருத்துக் கேட்கிறேன். ஒரு விஷயம் தெளிவாகிறது, நாட்டின் பெண்கள் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே நமது இந்தியா முன்னேறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.