தசரா பண்டிகை நாளில் அம்பானி குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்!

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் தலைவரான முகேஷ் அம்பானி, உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் தொடர்ந்து டாப் 10 இல் இருந்து வருகிறார். இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான அம்பானிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இன்று அதிர்ச்சிகரமான அனுபவம் ஒன்று நேர்ந்துள்ளது. மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு நேற்று மதியம் 1 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், தான் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய உள்ளதாகவும், அவர்களது மருத்துவமனையையும் வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாகவும் மிரட்டல் விடுத்துவிட்டு தொலைபேசி தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் பதற்றமைடந்த மருத்துவமனை நிர்வாகம் உடனே இதுகுறித்து டிபி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அந்த புகாரின் பேரில் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.