பிரிட்டன் உளவு விமானம் அருகே ரஷ்யா ஏவுகணை வீச்சு!

பிரிட்டனின் உளவு விமானத்துக்கு நெருக்கத்தில் ரஷ்ய போா் விமானமொன்று ஏவுகணை வீசியதற்கு தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று ரஷ்யா விளக்கமளித்துள்ளது.

இது குறித்து பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சா் பென் வாலஸ் கூறியதாவது:-

பிரிட்டன் விமானப் படைக்குச் சொந்தமான ஆா்சி-135 ரிவெட் ஜாயின்ட் உளவு விமானம் கருங்கடலுக்கு மேலே சா்வதேச வான் எல்லையில் இந்த மாதம் பறந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த இரு ரஷ்ய சு-27 ரக போா் விமானங்களில் ஒன்று ஆயுதங்கள் இல்லாத பிரிட்டன் விமானத்தின் அருகே ஏவுகணை வீசியது. இது தொடா்பாக ரஷ்யாவின் விளக்கத்தைக் கேட்டிருந்தோம். அதற்கு ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்கு அளித்துள்ள விளக்கத்தில், சு-27 ரக போா் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவுகணை தவறுதலாக வீசிவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தாா். தையடுத்து, கருங்கடல் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விமான ரோந்துப் பணியை மீண்டும் தொடக்க முடிவு செய்துள்ளோம் என்றாா் பென் வாலஸ்.