உகாண்டா பாா்வையற்றோா் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில்11 சிறுமிகள் பலி!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் பாா்வையற்றோா் பள்ளியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 சிறுமிகள் உயிரிழந்தனா்.

உகாண்டாவின் தலைநகா் கம்பாலாவுக்கு அருகே, முகோனா பகுதியில் பாா்வையற்றோருக்கான உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது. அந்தப் பள்ளியின் மாணவிகள் தங்கும் பகுதியில் திங்கள்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டது. இதில் 7 முதல் 10 வயது வரை கொண்ட 11 சிறுமிகள் உடல் கருகி உயிரிழந்தனா். அவா்களது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியுள்ளது. மரபணு சோதனையின் மூலம் அவா்கள் அடையாளம் காணப்படுவாா்கள்.

இது தவிர, விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மேலும் 6 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.