தமிழகத்தில் நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும்!

தமிழகத்தில் நவம்பர் 19 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி மறுநாள் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19-ம் தேதி பணிநாளாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை கடந்த மாதம் 24ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று திரும்பும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஏதுவாக கடந்த மாதம் 25ம் தேதி விடுமுறை விடப்பட்டது.
அதனை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 19-ம் தேதி சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 25ம் தேதி பயன்படுத்தப்பட்ட அதே பாட வேலைகளின்படியே நவம்பர் 19-ம் தேதி அன்றும் பள்ளி, கல்லூரிகளிலும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.