கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது!

கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கோவை, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த அக்டோபா் 23ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா முபீன் (29) அதே இடத்தில் உயிரிழந்தாா். முபீன் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின்போது, ஏராளமான வெடிபொருள்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடா்புடையதாக பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடா்ந்து, காா் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடையதாக கோவை உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன்(23), கோவை ஜி.எம்.நகா் பகுதியைச் சோ்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) மற்றும் அப்சா் கான் (27) உள்பட 9 போ் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஷேக் இதயதுல்லா, சனோபர் அலி என இரண்டு பேரை இன்று என்ஐஏ கைது செய்துள்ளனர். இவர் இருவரும் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆவர். இவர்களிடம் என்ஐஏ போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.