காஷ்மீரில் குரங்குகளுக்கு பழம் கொடுக்கும் த்ரிஷா புகைப்படம் வைரல்!

காஷ்மீரில் இருக்கும் த்ரிஷா, தன்னுடைய ஜன்னலுக்கு பக்கத்தில் இருந்துக் கொண்டு குரங்குகளுக்கு பழங்கள் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய், த்ரிஷா ஜோடி தற்போது லியோ படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்த ஜோடி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் முதல் வாரத்தில் லியோ படத்தின் சூட்டிங் காஷ்மீரில் துவங்கியது. இதற்காக படக்குழுவினர் தனி விமானத்தில் காஷ்மீர் புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து காஷ்மீரின் பல படங்களில் இருந்துக் கொண்டு, தனியாகவும், படக்குழுவினருடனும் இணைந்து த்ரிஷா புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

இதனிடையே விஜய்யுடன் த்ரிஷா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் மிகுந்த வைரலாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன. பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விமானநிலையத்தில் பெண் விமானியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. தொடர்ந்து தனியாகவும் படக்குழுவினர் போட் அவுசில் ரைட் போகும்படியாகவும் த்ரிஷா புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடித்துவரும் நிலையில், த்ரிஷாவின் கேரக்டர் எப்படி இருக்கும் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்களை மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனிடையே தற்போது லியோ சூட்டிங்கிற்காக காஷ்மீரில் இருக்கும் த்ரிஷா, தன்னுடைய ஜன்னலுக்கு பக்கத்தில் இருந்துக் கொண்டு குரங்குகளுக்கு பழங்கள் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது. இந்தப் புகைப்படத்தில் எந்தவிதமான பயமும் இல்லாமல் கேஷுவலான நடிகை த்ரிஷா குரங்குகளின் பக்கத்தில் அமர்ந்தவாறு உள்ளார். இந்தப் புகைப்படம் அதிகமான ரசிகர்களால் விரும்பப்பட்டு அதிகமான லைக்ஸ்களையும் பெற்றுவருகிறது.