நயன்தாராவால் பறிபோன ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு: மம்தா மோகன்தாஸ்!

நடிகை மம்தா மோகன்தாஸ் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். குசேலன் படத்தில் தான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதை அறிந்தபோது, தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக தற்போது மம்தா மோகன்தாஸ் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

நடிகை மம்தா மோகன்தாஸ் விஷாலுடன் சிவப்பதிகாரம் என்ற படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து தமிழில் குரு என் ஆளு, தடையறத் தாக்க, எனிமி போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மம்தா மோகன்தாஸ், சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு மலையாளத்திலேயே கூடுதல் கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தபோது புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளானார் மம்தா மோகன்தாஸ். தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று நோய் பாதிப்பிலிருந்து மீண்டார். தன்னுடைய நண்பர்களிடம் இந்த விஷயத்தை கூறியபோது அவர்கள் கொடுத்த நம்பிக்கை தனக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்ததாகவும் ஆனால் இருட்டு அறையில் அமர்ந்து இதுகுறித்து யோசித்து பலமுறை அழுதிருப்பதாகவும் முன்னதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தற்போது மலையாளப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் மம்தா மோகன்தாஸ்.

தமிழில் குசேலன் படத்தில் நடிகராக நடித்திருந்த ரஜினிக்கு ஜோடியாக, அவருடன் சில காட்சிகளிலும் ஒரு டூயட் பாடலிலும் தான் நடித்திருந்ததாகவும், ஆனால் தன்னுடைய காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் மம்தா மோகன்தாஸ் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் அந்தப் படத்தில் ரஜினியின் ஹீரோயினாக நடிகை நயன்தாரா நடித்திருந்ததால், மேலும் ஒரு நாயகி எதற்கு என்று அவர் கூறிவிட்டதால், தன்னுடைய காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக மம்தா மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.

ரஜினி, பசுபதி, மீனா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான குசேலன் படத்தில் பசுபதியின் நண்பராக, ஹீரோவாக ரஜினி நடித்திருந்தார். இந்தப்படத்தில்தான் ரஜினியின் நாயகியாக மம்தா மோகன்தாஸ் சில தினங்கள் நடித்திருந்தார். இந்தப் படத்தில் தான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதை அறிந்தபோது, தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக தற்போது மம்தா மோகன்தாஸ் பேட்டியொன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.