கேரளாவில் பினராயி விஜயன் அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

கேரளாவில் பினராயி விஜயன் அரசை கண்டித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சினரை தண்ணீரை பீச்சியடித்து போலீசார் விரட்டியடித்தனர்.

கொச்சி மாநகராட்சிக்குட்பட்ட பிரம்மபுரத்தில் 110 ஏக்கரில் செயல்பட்டு வரும் குப்பை கிடங்கில் கடந்த 2-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் கொச்சியில் உள்ள பல இடங்கள் புகை மண்டலங்களாக காட்சியளித்தன. இதன் காரணமாக அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இடதுசாரி அரசின் அலட்சியப்போக்கே தீவிபத்துக்கு காரணம் என்று குற்றம் சாட்டி போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரை தண்ணீரை பீச்சியடித்து போலீசார் விரட்டியடித்தனர். கொச்சி குப்பை கிடங்கு பிரச்சனை தொடர்பாக நடிகர் மோகன்லால் 6 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் பினராயி விஜயனுக்கு எழுதிய கடித்தம் தற்போது வைரலாகி வருகிறது.