ராஜபக்சே இன்று மிகப்பெரிய தண்டனையை அனுபவித்து வருகிறார்: விஜயகாந்த்

ஒரு இனத்தை அழித்த ராஜபக்சே இன்று மிகப்பெரிய தண்டனையை அனுபவித்து வருகிறார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர்களுக்கு எதிராக இலங்கை மக்கள் வெகுண்டெழுந்ததையடுத்து மகிந்த ராஜபக்சே தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதுடன், உயிர் பயத்தில் குடும்பத்துடன் ஓடி ஒளிய வேண்டிய அவல நிலைக்கும் அவர் தள்ளப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் தமிழினத்தையே அழித்த ராஜபக்சேவுக்கு எதிராக தற்போது சிங்கள மக்களே கொதித்தெழுந்துள்ளனர்.

இந்த நிலையில், ஒரு இனத்தை அழித்த ராஜபக்சே இன்று மிகப்பெரிய தண்டனையை அனுபவித்து வருகிறார் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வன்முறை வெடித்துள்ள நிலையில் பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். ஒரு இனத்துக்காக போராடிய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இரக்கமற்ற முறையில் கொலை செய்து, அத்தனை மக்களை கொலை. கொள்ளை, பலாத்காரம் செய்து மிக கொடூரமாக நடந்து கொண்ட ராஜபக்சேவுக்கு தற்போது மிகப் பெரிய தண்டனை கிடைத்துள்ளது.

இனப்படுகொலை செய்யப்பட்டபோது தமிழீன மக்கள் ஒவ்வொருரின் வயிறு எப்படி எரிந்ததோ, அந்த சாபம்தான் தற்போது இலங்கையே பற்றி எரிந்த கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு செய்த கொடுமைக்காகவும், அப்பாவி தமிழ் மக்களை கொன்றதற்காகவும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு கிடைத்த தண்டனையாக தான் இன்றைய அவர்களின் நிலைமை பார்க்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவருடன் இறந்த தமிழீழ மக்களின் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும். அந்த மக்களை நினைத்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.