கொஞ்சம் பொறுமையா இருங்க நானே சொல்றேன்: கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து சமீபத்தில் ஒரு தகவல் பரவிய சூழலில் அதுபற்றி அவர் விளக்கமளித்திருக்கிறார்.

தயாரிப்பாளரும், நடிகருமான ஜி.சுரேஷ்குமாருக்கும், நடிகை மேனகாவுக்கும் பிறந்தவர் கீர்த்தி சுரேஷ். திரைக்குடும்பத்தை சேர்ந்ததால் இவரும் திரைத்துறையில் நுழைந்தார். பைலட்ஸ், குபேரன் உள்ளிட்ட மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கீர்த்தி. அதனையடுத்து மோகன்லால் நடித்த கீதாஞ்சலி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் இது என்ன மாயம். விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படத்தில் நடித்ததன் மூலம் கீர்த்தி சுரேஷ் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட்டானது. தொடர்ந்து ரெமோ, பைரவா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகையாக மாறினார். சமீபத்தில் தசரா படத்தில் நடித்திருந்தார். படத்துக்கு கலவையான விமர்சனங்கள்தான் என்றாலும் கீர்த்தியின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது.

இந்தச் சூழலில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அடிக்கடி கிசுகிசுவில் சிக்கி வருகிறார். முதலில் இசையமைப்பாளர் அனிருத்தை கீர்த்தி சுரேஷ் காதலிப்பதாக தகவல் வேகமாக பரவியது. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது. அதனையடுத்து அவர் தனது நீண்ட கால நண்பரை காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் ஒருவருடன் கீர்த்தி சுரேஷ் இருக்கும் புகைப்படமும் சில நாள்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஹா ஹா இந்த புகைப்படத்தில் இருப்பவர் என்னுடைய நண்பர். அவர் தனது வருங்கால கணவர் இல்லை என்றும் என்னுடைய வாழ்க்கை துணை பற்றிய தகவலை நானே கூறுவேன். அதுவரை “சில் பில்” ஆக இருங்கள். குறிப்பு – ஒரு முறை கூட சரியாக வரவில்லையா” என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.