நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் இருப்பதை போன்ற புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ‘இஷ்டம்’ படம் மூலம் மலையாள திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் நவ்யா நாயர். மலையாள திரையுலகில் சுமார் 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளியான ‘அழகிய தீயே’ படம் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் கலைஞர் எழுதிய ‘பாசக்கிளிகள்’, சேரனின் ‘மாயக்கண்ணாடி’ மற்றும் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நவ்யா நாயர் சினிமாவை விட்டு சற்று விலகியிருந்தார். தற்போது கடந்த 12 ஆம் தேதி ரிலீசாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் ‘ஜானகி ஜானே’ என்ற படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப்படத்திற்காக பல்வேறு பகுதிகளில் நடக்கும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார் நவ்யா நாயர். அந்த வகையில் கேரளாவில் உள்ள சுல்தான் பத்தேரி என்ற பகுதியில் இப்படத்தில் புரமோஷனுக்காக நவ்யா நாயர் சென்ற போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கோழிக்கூட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நவ்யா நாயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது மருத்துவமனைவில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்சசி அடைந்துள்ளனர். மேலும் அவர் விரைவில் குணமடைய வர வேண்டும் என ஆறுதல் கூறி வருகின்றனர்.