பிபிசி நிறுவனத்திற்கு டெல்லி கோர்ட் புதிய சம்மன்!

பாஜக நிர்வாகி பினய் குமார் சிங் தொடுத்த அவதூறு வழக்கில் இங்கிலாந்தை சேர்ந்த ஊடக நிறுவனமான பிபிசிக்கு டெல்லி ரோஹினி நீதிமன்றம் புதிய சம்மனை அனுப்பியுள்ளது.

பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தையோ அல்லது ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளுக்கு எதிராக ஒரு தகவலையும் வெளியிடக்கூடாது எனக்கோரி பிபிசி நிறுவனம் மற்றும் விக்கி பீடியாவிற்கு எதிராக பாஜக நிர்வாகி பினய்குமார் சிங் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். டெல்லி ரோஹினி நீதிமன்றத்தில் இந்த அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, பிபிசி நிறுவனத்திற்கு டெல்லி ரோஹினி நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.