அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவர் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.

சென்னை, விழுப்புரத்தில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீதர் காலனியிலுள்ள வீட்டில் 5க்கும் அதிகமான அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வீடு, அலுவலகம், விழுப்புரத்தில் உள்ள வீடு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடக்கிறது.

மேலும் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி வீட்லும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத்துறை இந்த சோதனை நடைபெறுகிறது. அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதால் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

சோதனை நடைபெறும் வீட்டில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 13ஆம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின்னர் அவர் சட்டவிரோத பண மோசடி வழங்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.