மணிப்புரி பெண்களின் கண்ணியத்தை காக்க மத்திய அரசு முன்வர வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

மணிப்புரி பெண்களின் கண்ணியத்தை காக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதாவது, “மணிப்பூரில் இரண்டு பெண்கள் ஆயுதம் ஏந்திய கும்பலால் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அம்மாநிலத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அம்மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்கவும், மணிப்புரி பெண்களின் உயிரையும் கண்ணியத்தையும் பாதுகாக்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.