பரந்தூர் விமான நிலையம்: மத்திய அரசிடம் இட ஒப்புதல் கோரும் தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் பரந்தூர் பசுமை விமான நிலையத்துக்கான இட ஒப்புதல் வழங்க மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளதாக மத்திய அமைச்சர் விகே சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங் லோக்சபா, ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்களில் கூறியுள்ளதாவது:-

11 பசுமை விமான நிலையங்கள் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்துள்ளன. கோவாவில் மோபா, மகாராஷ்டிராவின் நவிமும்பை, ஷீரடி மற்றும் சிந்துதுர்க், கர்நாடகாவில் கலபுரகி, விஜயபுரா, ஹாசன் மற்றும் சிவமொஹா, மத்தியப் பிரதேசத்தின் டாப்ரா (குவாலியர்), உத்தரப்பிரதேசத்தில் குஷிநகர் மற்றும் நொய்டா (ஜேவார்), குஜராத்தில் தோலேரா மற்றும் ஹிராசர், புதுச்சேரியில் காரைக்கால், கர்னூல், கர்னூல் ஆகிய 21 புதிய பசுமை விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் பசுமை விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான முதல் கட்ட அனுமதி அதாவது இட ஒப்புதல் வழங்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது. பசுமை விமான நிலைய கொள்கையின்படி, இந்த முன்மொழிவு இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ), சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் (எம்ஓடி) ஆகியவற்றுக்கு அவர்களின் கருத்துகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது. பங்குதாரர்களுடனான இந்த ஆலோசனையின் பின்னர், இடஒப்புதல் வழங்குவது தொடர்பாக கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்கள் குறித்த வழிகாட்டுதல் குழுவின் பரிந்துரைக்காக முன்மொழிவு வைக்கப்பட வேண்டும்.

ஜி.எஃப்.ஏ கொள்கை, 2008 இன் படி, திட்டத்திற்கான நிதி, நிலம் கையகப்படுத்துதல்,உள்ளிட்ட விமான நிலைய திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு அந்தந்த மாநில அரசு உட்பட சம்பந்தப்பட்ட விமான நிலைய மேம்பாட்டாளரிடம் உள்ளது (மாநில அரசு திட்ட முன்மொழிபவராக இருந்தால்). விமான நிலையங்கள் கட்டுவதற்கான காலக்கெடு நிலம் கையகப்படுத்துதல், கட்டாய அனுமதிகள், தடைகளை நீக்குதல், நிதி மூடல் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. பசுமை விமான நிலையங்கள் (ஜி.எஃப்.ஏ) கொள்கை, 2008ஐ மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இது நாட்டில் புதிய பசுமை விமான நிலையங்களை உருவாக்குவதற்கான நடைமுறை மற்றும் நிபந்தனைகளை வரையறுக்கிறது. ஒப்புதலில் இரண்டு கட்ட செயல்முறை உள்ளது. அதாவது இட ஒப்புதல் மற்றும் கொள்கை ரீதியான ஒப்புதல்.

அஸ்ஸாம் மாநிலம் கச்சாரில் உள்ள டோலு டி.இ.யில் பசுமை விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான ‘இட ஒப்புதல்’ வழங்குவதற்காக இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) பசுமை விமான நிலைய கொள்கை, 2008 இன் கீழ் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் (எம்.ஓ.சி.ஏ) விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. வடகிழக்கு பிராந்தியம் உட்பட பிராந்திய விமான இணைப்பை ஊக்குவிக்கவும், விமான பயணத்தை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் 21-10-2016 அன்று பிராந்திய இணைப்பு திட்டம் (ஆர்.சி.எஸ்) – உடான் அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் தேவையை அடிப்படையாகக் கொண்டது. உடான் திட்டத்தின் கீழ், வடகிழக்கு பிராந்தியத்தில் பாசிகாட், தேஜு, இட்டாநகர் (ஹோலோங்கி), ஜோர்ஹாட், லீலாபரி, ரூப்சி, தேஜ்பூர், ஷில்லாங் (பராபானி), திமாபூர் மற்றும் பாக்யாங் ஆகிய 10 விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன / புதுப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய அமைச்சர் விகே சிங் தெரிவித்தார்.