இல்லாத பேயை காட்டி வியாபாரம் பண்ணும் பூசாரிகளை போல அண்ணாமலை: வன்னியரசு

இல்லாத பேயை காட்டி வியாபாரம் பண்ணும் பூசாரிகளை போல அண்ணாமலை, இல்லாத ஊழலை காட்டி தமது இருப்பை நிறுவ முயற்சிக்கிறார் என்று விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

முனி போன்ற பேய்களை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி அடைந்ததால், அடுத்தடுத்து part 1, part2 என எடுக்கிறார்கள். பேய் இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல; அந்த பயத்தை வைத்து வியாபாரமாக்குவது தான் முக்கியம். அதே போலத்தான் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை DMK Files part 1 என வெளியிட்டார் பாஜக தலைவர் திரு.அண்ணாமலை. பொதுவாக Part 1 வெற்றி அடைந்தால் தான் அடுத்த part வெளியிடுவார்கள். ஆனால்,முதல் பாகமே தோல்வி அடைந்து விட்டது. திமுக அமைச்சர்களின் ஊழல் நிரூபிக்கப்படவில்லை. இல்லாத பேயை காட்டி வியாபாரம் பண்ணும் பூசாரிகளை போல அண்ணாமலை, இல்லாத ஊழலை காட்டி தமது இருப்பை நிறுவ முயற்சிக்கிறார். இதற்கு ஆளுனரும் திருநீறு அடிக்கும் கேவலத்தை செய்கிறார். அண்ணாமலை வகையறாக்களின் இந்த பேயாட்டத்தை பகுத்தறிவாளர்களான தமிழ்நாட்டு மக்கள் நம்பமாட்டார்கள். இவ்வாறு வன்னியரசு பதிவிட்டுள்ளார்.