கஜினி படத்த பாத்து ரெண்டு நாள் அழுத மஹிமா நம்பியார்!

சந்திரமுகி 2 படத்தின் ஹீரோயின் மஹிமா நம்பியார் சூர்யாவின் கஜினி படத்தை பார்த்து இரண்டு நாட்களுக்கு அழுதாராம்.

நடிகை மஹிமா நம்பியார் கேரளா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். என்னதான் கேரளாவை சொந்த ஊராக கொண்டாலும், தமிழ் படங்களில் தான் அதிகமாக நடித்திருக்கிறார். சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மஹிமா நம்பியார். அதன் பிறகு, என்னமோ நடக்குது, மொசக்குட்டி, அகத்திணை என தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்தார். சமீபத்தில், ஓஹ் மை டாக், அயங்கரம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், லட்சுமி மேனன் போன்ற பலர் நடித்த சந்திரமுகி படத்தில் ராகவா லாரனசுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் கிளாமரில் தாராளம் காட்டி நடித்திருப்பார் மஹிமா. இந்த படத்தின் மூலம் மேலும் பிரபலமடைந்தார் நடிகை மஹிமா. இவர் தற்போது, விஜய் ஆண்டனியின் ரத்தம், 800 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை மஹிமா நம்பியார் கொடுத்திருந்த நேர்காணலில், அவர் படங்களை மிகவும் சீரியஸாக பார்ப்பதாக கூறியுள்ளார். அவரது சிறிய வயதில், சூர்யாவின் கஜினி திரைப்படம் அவருக்கு மிகவும் பிடிக்குமாம், அந்த படம்தான் அவர் தியேட்டரில் பார்த்த முதல் தமிழ் படமாம். அந்த படத்தை பார்த்து 2 நாட்களுக்கு தொடர்ந்து அழுதுகொண்டிருந்தாராம். அந்த படத்தில் சூர்யா மற்றும் அசின் அவ்வளவு அதிக காதலோடு இருப்பார்கள், அனால், கடைசியில் அவர்கள் சேரமுடியாமல் இருக்கும், இதனை பார்த்து மஹிமா அழுதாராம். அப்போது அழுததை இப்போது நினைத்து பார்த்தால் சிரிப்புதான் வருகிறது என சிரித்துக்கொண்டே அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார் மஹிமா.