கமலுடன் முதன்முறையாக ஜோடி சேர போகும் நயன்தாரா!

கமல், மணிரத்னம் இருவரும் நீண்ட இடைவேளைக்கு தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். ‘KH 234’ படமாக உருவாகவுள்ள இதன் டீசரை உருவாக்கும் பணிகள் தற்போது துவங்கியுள்ளது. இந்த டீசரை கமலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ‘கமல் 234’ பட நாயகி குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் ரசிகர்கள் இடையில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

கமல் நடிப்பில் தற்போது ‘இந்தியன் 2’ படம் உருவாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கான டப்பிங் பணிகள் அண்மையில் துவங்கியது. கடந்த சில மாதங்களாகவே இப்படத்தின் ஷுட்டிங் மும்முரமாக நடந்து வந்தது. இந்நிலையில் கமலும், மணிரத்னமும் இணையும் படம் குறித்த பேச்சுக்கள் தான் சோஷியல் மீடியா முழுக்க வைரலாகி வருகின்றன.

கமலும், மணிரத்னமும் இணைகிறார்கள் என்ற போதே கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த கூட்டணி இணைந்துள்ளனர். தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களான இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு பிறகு இணையவுள்ளனர். இவர்களின் கூட்டணியில் வெளியான ‘நாயகன்’ படம் இன்றளவும் தமிழ் சினிமாவின் கிளாஸிக் படமாக திகழ்கிறது. இந்நிலையில் தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து ‘கமல் 234’ படத்தை தயாரிக்க உள்ளனர். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார் மணிரத்னம்.

இந்நிலையில் இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகி சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது. அதன்படி கமலுடன் இப்படத்தில் நயன்தாரா இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் நயன்தாரா ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், கார்த்தி, ஆர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனாலும் இதுவரை கமலுடன் மட்டும் இணைந்து நடிக்கவில்லை. அந்த குறை தற்போது ‘கமல் 234’ படம் மூலமாக நிவர்த்தி அடைய போகிறது. முதன்முறையாக கமலுடன் நயன்தாரா இணைந்து நடிக்கவுள்ளது ரசிகர்கள் இடையில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் நடிக்க திரிஷா, வித்யாபாலனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்தப்படத்தில் நடிக்க நயன்தாராவை படக்குழு அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.