ரூ.20 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு இ மெயில் மூலம் மிரட்டல்!

ரூ.20 கோடி தாங்க இல்லையென்றால் உங்களை சுட்டு கொன்று விடுவோம் என்று இமெயில் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும், இந்தியாவின் மெகா கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர். அம்பானி குடும்பத்தினருக்கு எதிராக அச்சுறுத்தல் உள்ளதே இதற்கு காரணம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இவரது வீட்டுக்கு அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஸ்கார்பியோ கார் ஒன்று நின்றிருந்தது. ஆனால் நல்ல வேளையாக வெடிகுண்டுகள் வெடிக்கவில்லை. அதேசமயம் இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், நேற்று முகேஷ் அம்பானிக்கு ஒரு கொலை மிரட்டல் வந்துள்ளது. முகேஷ் அம்பானிக்கு மர்ம நபர்கள் இமெயில் மூலம் விடுத்துள்ள கொலை மிரட்டலில், ரூ.20 கோடி தர வேண்டும் தர தவறினால் சுட்டு கொன்று விடுவோம் என்று அச்சுறுத்தியுள்ளனர். இதனையடுத்து முகேஷ் அம்பானி தரப்பு இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தனர்.

மும்பை காம்தேவி காவல்நிலைய போலீசார் புகாரை பெற்றுக் கொண்டு ஐ.பி.சி. 387 மற்றும் 506 (2) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.