எனது திருமணம் கண்டிப்பாக காதல் திருமணம் தான்: ஸ்ரீதிவ்யா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் நடிகை ஸ்ரீ திவ்யா. அவர் என்னதான் பார்க்க சின்ன பொண்ணு போல இருந்தாலும், அவருக்கும் திருமண வயது வந்துவிட்டது. அவரின் திருமணம் குறித்து அவரே ஒரு தகவலை கூறியிருக்கிறார்.

நடிகை ஸ்ரீ திவ்யா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிறகு, 2010ல் ஹீரோயினாக தெலுங்கு படத்தில் நடித்து அறிமுகமானார். நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார்.

வருத்தப்படாதா வாலிபர் சங்கம் படத்தில் நடித்து எதார்த்த நடிகை என்னும் பட்டத்தை மக்களிடம் இருந்து பெற்றார் ஸ்ரீ திவ்யா. அதன்பிறகு, விஷ்ணு விஷாலுடன் ஜீவா, விக்ரம் பிரபுவுடன் வெள்ளக்காரதுரை , இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் காக்கி சட்டை என படங்களில் நடித்திருக்கிறார் நடிகை ஸ்ரீ திவ்யா. அதன் பிறகு, பென்சில், மருது, காஷ்மோரா, பெங்களுர் நாட்கள், ஈட்டி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க அன்பை பெற்றார்.

2017ல் நடிகர் ஜீவாவுடன் சங்கிலி புங்கிலி கதவ திற என்னும் படத்தில் நடித்த பிறகு எந்த படத்திலும் ஸ்ரீ திவ்யாவை பார்க்க முடியவில்லை. அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்காமல் எங்கு சென்றார் என தெரியாமலேயே இருந்தது. இந்நிலையில், கம் பேக் கொடுக்கும் விதமாக, தமிழில் ரெய்டு என்னும் படத்தில் நடித்திருக்கிறார். நடிகை ஸ்ரீ திவ்யா, கவர்ச்சியான வேடங்களில் நடிக்காமலேயே ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஒரு நேர்காணலில் கலந்துகொண்டிருக்கிறார் நடிகை ஸ்ரீ திவ்யா. அப்போது அவரது திருமணம் காதல் திருமணமா? அல்லது வீட்டில் பார்க்கும் மாப்பிளையை திருமணம் செய்வீர்களா? என்னும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை ஸ்ரீ திவ்யா, அவரது திருமணம் கண்டிப்பாக காதல் திருமணம் தான் என்றும், அவரின் காதலரைதான் உறுதியாக திருமணம் செய்யப்போவதாகவும் கூறினார். யார் அந்த காதலர் என்ற கேள்விக்கு, கண்டிப்பாக நேரம் வரும்போது கூறுவதாக அவர் பதிலளித்திருக்கிறார்.