காதலர் ஜகத் தேசாயை இரண்டாவது திருமணம் செய்த அமலா பால்!

நடிகை அமலா பாலுக்கும், அவரின் காதலரான ஜகத் தேசாய்க்கும் கொச்சியில் திருமணம் நடந்தது.

அமலா பாலும், ஜகத் தேசாயும் காதலித்து வந்தார்கள். இந்நிலையில் அமலா பாலின் பிறந்தநாள் அன்று திடீரென்று ப்ரொபோஸ் செய்தார் ஜகத். அவர் மோதிரத்தை காட்டி என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்க அமலா பாலும் சந்தோஷமாக ஆமாம் என்றார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை அமலா பாலும், ஜகத் தேசாயும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்கள்.

அமலா பால் வாழ்வில் மீண்டும் நல்லது நடக்கப் போகிறது என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்நிலையில் அமலா பாலுக்கும், ஜகத் தேசாய்க்கும் கேரள மாநிலம் கொச்சியில் வைத்து நேற்று நவம்பர் 5ம் தேதி திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இருவருமே அவரவர் இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்களில் அமலா பால் மிகவும் அழகாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறார்.

அந்த புகைப்படங்களில் அமலா பாலும், தேசாயும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். புகைப்படங்களை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இரண்டாவது வாய்ப்பு என்பது கடவுள் அளிப்பது. அது உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த திருமணமாவது கடைசி வரை நிலைத்து இருக்க வாழ்த்துக்கள் அம்மு என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜகத் தேசாய் ஒரு தொழில் அதிபர் ஆவார். இது அமலா பாலுக்கு இரண்டாவது திருமணம் ஆகும். முன்னதாக இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு 2016ம் ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்றார்கள். இதையடுத்து 2017ம் ஆண்டு விஜய்க்கும், அமலா பாலுக்கும் விவாகரத்து கிடைத்தது.